×

நரிக்குறவர்களுக்கு காய்கறிகள்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த வயலூர் கிராமத்தில் வசிக்கும் 200 நறிக்குறவர்களுக்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் இயற்கை முறையில் பயிரிடப்பட்ட காய்கறிகள் வழங்கப்பட்டன. சோழனூர் மா.ஏழுமலை தலைமை தாங்கினார். இயக்குனர்கள் பரசுராமன், தாமஸ், வெங்கடேசன், விரப்பன், வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயி வெங்கடாசலம், உதவி வேளாண் அலுவலர் தனசேகரன் ஆகியோர் வரவேற்றனர். மாவட்ட வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் முகமதுரபீக் கலந்து கொண்டு இயற்கை முறையில் பயிரிடப்பட்ட காய்கறிகள் ஒரு குடும்பத்திற்கு 5 கிலோ வீதம் 200 குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கினார்.


Tags : Vegetables , foxes
× RELATED ஊட்டிக்கு டிரைவராக சென்றவர் பஸ்சில் சடலமாக திரும்பினார்